ArchiveSeptember 2011

பெயர் சூட்ட வேண்டாம்

பெயர் சூட்ட வேண்டாம். அ.முத்துலிங்கம்   18 May 2011 President Amnesty International 1, Easton Street, London, WC1X0DW U.K மேன்மை தங்கிய ஐயா, என்னுடைய பெயர் விசாலாட்சி கனகரத்தினம். என் விலாசத்தை எழுத முடியாது ஏனென்றால் கடந்த ஐந்து வருடங்களில் நான் ஏழு தரம் இடம் மாறிவிட்டேன். நான் கடைசியாக தங்கிய இடம் முள்ளிவாய்க்கால். என் கணவர் குண்டு பட்டு இறந்த பிறகு நானும் மகனும் பிளாஸ்டிக் கூரை போட்ட ஒரு...

தூக்கத்திற்கான நேரம்

  ஒரு சாது மரத்தின் கீழ் தியானத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்ப்பதற்கு நாலு வேதங்களையும் கரைத்துக்குடித்த மகாபண்டிதரை சிலர் அழைத்து வந்திருந்தார்கள். பண்டிதருக்கு பன்னிரெண்டு மொழிகள் தெரியும். அவர் ஆடம்பரமாக ஆடையணிந்திருந்தார். சரிகைத் தலைப்பாவும் கைத்தடியுமாக இறுமாப்புடன் நின்றவரை கூட்டிவந்தவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். ‘இவர் சகலதும் அறிந்தவர். நிறையப் படித்தவர். உங்களைப் பார்க்க...

கொழுத்தாடு பிடிப்பேன்

 ஓம் கணபதி துணை.    The Immigration Officer          200 St. Catherine Street, Ottawa, ON          K2P 2K9.          (Please translate Sri Lankan Tamil language)  (இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர் வசனங்களின் ஓடரை மாற்றாமலும், எனது கருத்துக்கள் சரியாக...

இன்றைக்கு அனுப்புகிறேன்

2010ம் ஆண்டு பிறந்த சில வாரங்களில் ரொறொன்ரோவில் எல்லோரும் பேசினார்கள், பனிக்காலம் முடிந்துவிட்டது என்று. பிறகு பார்த்தால் மறுபடியும் பனி பொழிந்தது. அது முடிந்த கையோடு வெய்யில் எறித்தது. சரி பனிப் பருவம் தாண்டிவிட்டது என்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்கள். ஆனால் பனி போவதாக தெரியவில்லை. மறுபடியும் பெய்தது. காலநிலை அறிவிப்பாளரிடம் அது விளையாடிக்கொண்டிருந்தது. தொலைக்காட்சிப் பெண் நம்பிக்கையாகச்...

புகைப்படக்காரி

நான் நேற்று மாலை பொஸ்டன் வந்து சேர்ந்தேன். இன்று காலை பக்கத்து வீட்டில் ஆரவாரம் தொடங்கியது. அதற்கும் நான் வந்ததற்கும் ஒருவித சம்பந்தமும் இல்லையென நினைக்கிறேன்.  பக்கத்து வீட்டுக்காரர் ஒரு மருத்துவர். மருத்துவத் துறையில் அவருக்கு விருது ஒன்று கிடைத்திருந்தது. அவரைப் பாராட்டுவதற்கு ஆட்கள் காரில் வந்தனர்; போயினர். மருத்துவர், அவர் வீட்டுக்கு முன் இருந்த மரங்கள் நிழல்தரும் தோட்டத்தில், சாய்மணக்...

என்ன ஊர் இது?

நாட்குறிப்பு எழுதும் பழக்கம் என்னிடம் இல்லை. என்றாலும் ஒவ்வொரு வருடம் பிறந்ததும் முதலில் வாங்குவது நாட்குறிப்பு புத்தகம்தான். அதில் முதல் மூன்று நாட்களும் தவறாமல் ஏதாவது எழுதிவைப்பேன். அத்துடன் அந்த வருடத்திற்கு எழுதியவை போதும் என்ற நினைப்பு வந்துவிடும். மீதி பக்கங்கள் எழுதாமல் வெறுமையாக இருக்கும். ஒருநாள் பழைய டயரிகளை எடுத்துப் புரட்டிக்கொண்டு வந்தபோது ஒரு கவிதை கண்ணில் பட்டது. நான் எழுதியது...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta