Authoramuttu

வார்த்தைச் சித்தர்

வார்த்தைச் சித்தர் அ.முத்துலிங்கம்   ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நான் ஒரு சிறுகதை எழுதினேன். அது கல்கிப் பத்திரிகையில் வெளியாகி பரிசும் பெற்றது. கொழும்பிலே எழுத்தாளர்கள் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்திற்கு நண்பர் சமீனின் வற்புறுத்தலில் புறப்பட்டேன். ‘நீதான் எழுத்தாளராகிவிட்டாயே, வா’ என்றார். நானும் போனேன். கூட்டத்தில் கைலாசபதி, சிவத்தம்பி என்று பலர் பேசினார்கள். கடைசியாக பேசவந்த எஸ்.பொ என்று...

கோப்பைகள்

கோப்பைகள் அ.முத்துலிங்கம் ‘இதுவெல்லாம் நடந்ததற்கு காரணம் ஒரு மார்க்தான். அந்த ஒரு மார்க் கிடைத்திருந்தால் என் வாழ்க்கை எங்கேயெல்லாமோ போயிருக்கும். இப்படி நடக்கும் என்று அப்போது யாருக்கு தெரியும்? நீ இரண்டு மாதம் முன்புதான் இங்கு வேலைக்கு சேர்ந்தாய். நான் 15 வருடமாக இங்கே இதே இடத்தில் நின்றபடி கோப்பை கழுவுகிறேன். அப்பொழுதெல்லாம் இது சின்ன உணவகம். நான் மட்டும்தான் வேலை செய்தேன். இப்போதுபோல நகரும்...

நான்தான் அடுத்த கணவன்

நான்தான் அடுத்த கணவன்   அ.முத்துலிங்கம்   ’பத்மப்ரியாவிடமிருந்து கடிதம் வந்திருந்தது. என் உடம்பு முழுக்க இருதயமாகித் துடித்தது. உருண்டை உருண்டையான எழுத்து. நான் டெல்லி சிறையிலிருந்து மீண்டு கனடா திரும்பி ஒரு வருடம் ஆகியிருக்கும். எப்படியோ என்னுடைய முகவரியை தேடிக் கண்டுபிடித்து எழுதியிருக்கிறாள். இது எப்படி சாத்தியமானது? ஐயா, என்னால் நம்பவே முடியவில்லை. என்னை அப்படிப் பார்க்க வேண்டாம். அப்படிப்...

78 ஆணிகள்

7

78 ஆணிகள்   அ.முத்துலிங்கம்   33 நாள் பயணம். குடிவரவு அதிகாரி கேட்கிறார் ‘என்ன கொண்டு வந்திருக்கிறாய்?’ ‘3000 ஆண்டு சிலுவை.’ ‘வேறு என்ன?’  ‘30 ஆணிகள்.’ ‘அப்படியா, உள்ளே வா.’ சிலுவையில் தன்னை அறைந்துகொள்ள அவனுக்கு புது நாடு ஒன்று கிடைத்துவிட்டது. செல்வம் அருளானந்தம் எழுதிய கவிதை இது. இப்படி 78 கவிதைகள் தொண்ட தொகுப்பு நூல் கனடாவில் வெளியாகியுள்ளது. உலகத்து சமகால தமிழ்க் கவிகளின் கவிதைகளை...

எமது மொழிபெயர் உலகினுள்

எமது மொழிபெயர் உலகினுள்     எஸ்.கே.விக்னேஸ்வரன்     உலகம் எங்கணும் பரந்து வாழும் எழுபத்தி எட்டுத் தமிழ்க் கவிஞர்களின் தெரிந்தெடுக்கப்பட்ட   கவிதைகளை அவற்றின்ஆங்கில மொழிபெயர்ப்புடன் இருமொழி நூலாகத் தமிழ் இலக்கியத்   தோட்டம்  கடந்தவாரம்(மார்ச் 9, 2014) ரொறொன்ரோவில் வெளியிட்டு வைத்தது. தமிழ்   இலக்கியத் தோட்டம், கனடாவில் இயங்கிவரும் அரசு சார்பற்ற அறக்கட்டளையாகும்.   இவ்வமைப்பு தமிழ் இலக்கியப்...

முன்னுரை

1964 இல் நான் எழுதி வெளிவந்த சிறுகதை தொகுப்பு ‘அக்கா’. ஐம்பது வருடங்கள் ஓடிக் கடந்துவிட்ட நிலையில் இந்த தொகுப்பை மீண்டும் கொண்டுவருகிறார் நற்றிணை பதிப்பகத்தை சேர்ந்த யுகன். அதற்கு நான் எழுதிய முன்னுரை.                        திரும்பிப் பார்க்கவில்லை   சமீபத்தில் ஒரு நேர்காணலின்போது என்னை நேர்கண்டவர் ஒரு கேள்வி கேட்டார். நான் அப்படியான கேள்வி ஒன்றுக்கு என்னைத் தயார் செய்யவில்லை. ஆகவே சற்று நேரம்...

இன்னொரு வாரம்

இன்னொரு வாரம்   அ.முத்துலிங்கம்   எச்சரிக்கை   வீட்டிலே பொருத்தியிருந்த அபாய மணி வேலை செய்யவில்லை. கதவு மணி, புகை மணி, யன்னல் மணி எல்லாமே வேலை நிறுத்தம் செய்துவிட்டன. வீட்டிலே நெருப்பு பிடிக்கலாம். திருடர்கள் வீட்டுக்குள் புகுந்து திருடிச் செல்லலாம். ஒருவித பாதுக்காப்பும் இல்லாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தோம்.   அபாய மணி கம்பனிக்கு முறைப்பாடு செய்தேன். அவர்கள் அதைத் திருத்துவதற்கு ஓர் ஆளை...

ஒரு வாரம்

ஒரு வாரம்   அ.முத்துலிங்கம்   விருது   சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவுக்கு போயிருந்தேன். பலவிதமான பரிசுகளும், விருதுகளும் வழங்கினார்கள். எல்லாமே மகிழ்ச்சியான விசயம்தான். ஒருவரைப் பாராட்டுவது எப்போதுமே வரவேற்கப்படவேண்டிய நிகழ்ச்சிதான்.   ஒருவருக்கு அவருடைய அதீத வணிக வளர்ச்சியை பாராட்டி விருது வழங்கினார்கள். சென்ற வருடம் அவருடைய லாபம் 3 மில்லியன் டொலர்கள் மட்டுமே. நடப்பு வருடம் அவருடைய லாபம்...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta