Authoramuttu

சின்னச் சம்பவம்

சின்னச் சம்பவம் அ.முத்துலிங்கம் சின்னச் சம்பவம் என்று ஒன்றும் உலகத்தில் கிடையாது. வழக்கம்போல வாடகைக் கார் நிறுத்தத்தில் காரை நிறுத்தி வைத்துக்கொண்டு வாடிக்கையாளருக்கு காத்திருந்தேன். எனக்கு முன்னால் இரண்டு கார்களும் பின்னால் நாலு கார்களும் நின்றன. பகல் பத்து மணி. மே மாதம் என்பதால் குளிரும் இருந்தது. வெப்பமும் இருந்தது. அன்று கொஞ்சம் வெப்பம் வெற்றி பெற்ற நாள். ரொறொன்ரோவின் அலுவலக அவசரம்...

இந்த வாரத்தில் 2 நாட்கள்

இந்த வாரத்தில் 2 நாட்கள்   அ.முத்துலிங்கம்   கார் கத்தியது   பெரிய ஹொட்டலில் விருந்து நடந்தது. என் மேசையில் இருந்த நண்பர் கேட்டார், ‘நீங்கள் இப்பவும் அடிக்கடி தொலைந்து போகிறீர்களா?’ நான் சொன்னேன். ‘நான் எங்கே தொலைந்து போகிறேன். ரோட்டுகள் அல்லவா திடீர் திடீரென்று தொலைந்து போகின்றன.’ அதுதான் நடந்தது. நான் புறப்பட்டபோது இரவு 11 மணி. கையிலே ரோட்டு வரைபடம் இருந்தது. செல்பேசியில் போகும் பாதைக் குறிப்பு...

கடவுச்சொல்

 கடவுச்சொல்                          அ.முத்துலிங்கம்   அன்று காலை விடிந்தபோது அது அவர் வாழ்க்கையில் மிகவும் ஆச்சரியமான நாளாக மாறும் என்பது சிவபாக்கியத்துக்கு தெரியாது. செப்டம்பர் மாதத்தில் இலைகள் நிறம் மாறுவது பார்க்க அவருக்கு பிடிக்கும். அவர் வசித்த நாலாவது மாடி மரங்களின் உயரத்தில் இருந்தது இன்னொரு வசதி. யன்னலைத் திறந்தவுடன் குளிர் காற்று வீசியது. முன்னே நிற்பது வெள்ளையடித்ததுபோல பேர்ச் மரம்...

சிவாஜியின் கையெழுத்து

                          சிவாஜியின் கையெழுத்து                            ’சிவாஜி வருகிறார், சிவாஜி வருகிறார்’ என்று கத்திக்கொண்டே என் நண்பன் பரஞ்சோதி ஓடிவந்தான். அவனுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. முதல் முறையாக நடிகர் சிவாஜி கொழும்புக்கு வரப்போகிறார். வருடம் 1959. தினகரன் பத்திரிகை ஆசிரியர் க.கைலாசபதியின் பெருமுயற்சியால் ஏற்பாடுசெய்யப்பட்ட முத்தமிழ் விழாவுக்கு சிவாஜி வருவது...

மூன்று கடிதங்கள் – பாலு மகேந்திரா

              மூன்று கடிதங்கள்               2010ம் ஆண்டு முடிவதற்கு இரண்டு நாள் இருந்தது. எனக்கு ஆங்கிலத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது. எழுதியவர் பாலு மகேந்திரா. அந்தப் பெரிய ஆளுமையிடம் இருந்து இதற்கு முன்னர் கடிதம் வந்தது கிடையாது. ஆகவே ஆச்சரியமாகவிருந்தது. நான் அவரைச் சந்தித்தது இல்லை. பேசியதில்லை. எழுதியதும் இல்லை. அந்த முதல் கடிதத்தை தொடர்ந்து மேலும் இரண்டு கடிதங்கள் வந்தன. இரண்டு...

IN OUR TRANSLATED WORLD

I

In Our Translated World    Contemporary Global Tamil Poetry   A review by Richard L. Reinert, PhD   Given the political climate and military turmoil that affected the people of Sri Lanka, one would expect that contemporary Tamil poetry to be underscored by sadness. And so it is in many of the selections in this book written by 78 Tamils, of whom 21 are women. The title, In Our Translated World...

அடைப்புகள்

                     அடைப்புகள்                             அ.முத்துலிங்கம்                   தேசம் மிக முக்கியம். அவளை எந்த தேசத்தவள் என்று கேட்கிறார்கள். அவளுக்கே அது தெரியாது. தகப்பன் இலங்கையைச் சேர்ந்தவர், தாய் மலையாளம். பிறந்தது துபாய், படித்தது இங்கிலாந்து, இப்போது வேலை பார்ப்பது அமெரிக்காவில்.                   அம்மாவில் அவளுக்கு எப்போதும் கோபம். அவள் யார், என்ன தேசம் என்று அவளுக்கு...

தவறவிடவேண்டாம்

  மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில்   10 வருடங்கள் – தினமும் இணையத்தில்    www.jeyamohan.in / www.venmurasu.in   2014 புத்தாண்டு முதல்…   வியாசனின் பாதங்களில் – ஜெயமோகன் .   இந்தப்புத்தாண்டு முதல் ஒருவேளை என் வாழ்க்கையில் இதுவரை நான் ஏற்றுக்கொண்டதிலேயே மிகப்பெரிய பணியைத் தொடங்குகிறேன். மகாபாரதத்தை ஒரு பெரும் நாவல்வரிசையாக எழுதவிருக்கிறேன்.   திட்டத்தை நினைத்தால் எனக்கு பிரமிப்பாகவே இருக்கிறது...

ஒரு நாள் ஒதுக்குங்கள்

விழா அழைப்பிதழ்  2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. நாள் 22. 12. 2013  இடம் நாணி கலையரங்கம், மணி ஸ்கூல், பாப்பநாயக்கன் பாளையம் கோவை  நேரம் மாலை 6 மணி நிகழ்ச்சிகள்  விருது வழங்குபவர்:  இந்திரா பார்த்தசாரதி தெளிவத்தை ஜோசப்பின் மீன்கள் சிறுகதைத்தொகுதி வெளியீடு வெளியிடுபவர் பாலசந்திரன் சுள்ளிக்காடு தெளிவத்தை ஜோசப்பின்...

என்ன செய்வது?

  இன்றைக்கும்  மனைவி என் அலுவலக அறைக்கு வந்தார். இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு ராணுவத்தை பார்வையிட வந்த ஜெனரல்போல இரண்டு பக்கமும் பார்த்தார். பல புத்தகங்கள் திறந்து நிலத்தில் கிடந்தன. நோட்டுப் புத்தகங்கள் பாதி எழுதியபடி சிதறியிருந்தன. கம்புயூட்டரில் நான் வேகமாக தட்டச்சு செய்துகொண்டிருந்தேன். மனைவி கேட்டார். ’இதுவெல்லாம் குப்பையாக கிடக்கிறதே. ஒழுங்காய் அடுக்கி வைக்க ஏலாதா? அதன் பின்னர்...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta