இப்படியொரு அவமானம் கனகசுந்தரிக்கு அவளுடைய 15 வயது வாழ்க்கையில் நடந்தது கிடையாது. இதற்கெல்லாம் காரணம் கறுப்பு ரீச்சர்தான். மற்றவர்கள் விமலா ரீச்சர் என்று அழைத்தாலும் அவளுக்கு அவர் கறுப்பு ரீச்சர்தான். எதற்காக தன் மீது வன்மம் பாராட்டுகிறார் என்று அவள் யோசித்திருக்கிறாள். ரீச்சர் வாய் திறக்கும்போது நாக்கு பிளந்திருக்கிறதா என்று உற்றுப் பார்த்திருக்கிறாள். கனகசுந்தரி அழகாக இருப்பாள்...
நாடற்றவன்
ஜூலை 27ம் தேதி ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆரம்பமாகும். வீரர்கள் அணிவகுப்பில் 204 நாடுகள் கலந்துகொள்ளும். அவர்கள் பெருமையுடன் அந்தந்த நாட்டுக் கொடிகளை தாங்கிச் செல்வார்கள். அந்த அணிவகுப்பில் நாடற்ற ஒருவனும் இருப்பான். அவனுக்கு நாடில்லாத படியால் அவன் கையில் ஒலிம்பிக் கொடியை பிடித்திருப்பான். அவனுக்கு பின்னால் அணிவகுத்துச் செல்ல வேறு வீரர்கள் இல்லை. 9 ஜூலை 2011ல் தனி நாடாக சுதந்திரம் அடைந்த தெற்கு...
எஸ்.ராமகிருஷ்ணனின் உரை
சென்னையில் உயிர்மை நடாத்திய அ. முத்துலிங்கத்தின் ‘ஒன்றுக்கும் உதவாதவன்’ நூல் வெளியீட்டின்போது திரு எஸ்.ராமகிருஷ்ணன் ஜனவரி 2012ல் ஆற்றிய உரை. ( ஒலியிலிருந்து எழுத்து – றஞ்சி திரு ) எல்லோருக்கும் வணக்கம். என்னுடைய மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். முத்துலிங்கத்தினுடைய கட்டுரைத் தொகுப்பைப் பற்றி பேசுவதற்காக நான் இன்று இங்கு வந்திருக்கிறேன். முத்துலிங்கத்தினுடைய...
மு.இராமனாதன்
புலம் பெயர்ந்தவர்களின் அடையாளம் : முத்துலிங்கத்தின் வெளி புலம் பெயர்ந்து வாழ்பவர்களில் தங்கள் பிறந்த மண்ணின் அடையாளங்களைத் தக்க வைத்துக் கொள்கிறவர்கள் உண்டு. புலம் பெயர்ந்த மண்ணின் அடையாளங்களைச் சுவீ்கரித்துக் கொள்கிறவர்களும் உண்டு. இரண்டிலிருந்தும் தங்களுக்கு வேண்டுவனவற்றை எடுத்துக் கொள்கிறவர்களும் உண்டு. இரண்டிற்கும் இடையில் ஊசலாடுபவர்களும் உண்டு. இவற்றையெல்லாம் அ.முத்துலிங்கம் அளவிற்குத்...
இன்றைய நாள்
இன்று முதலைகளைப் பற்றி படிக்கும் நாள். காலையிலிருந்து அதைத்தான் செய்கிறேன். புத்தகத்தில் படிப்பதும் ஏதாவது புது சந்தேகம் ஏற்பட்டால் கம்புயூட்டரில் தேடுவதுமாக நீண்ட நேரம் என் ஆராய்ச்சி நடந்தது. நான் ஒருமுகமாக வேறு கவனம் இல்லாமல் இந்த ஆய்வில் மூழ்கியிருந்ததைப் பார்ப்பவர்கள் நான் ஏதோ முனைவர் பட்டத்துக்கு தீவிரமாகப் படிப்பதாக நினைத்திருப்பார்கள். முதலைகள் குளிர் ரத்தப் பிராணிகள். அவை சாப்பிட்ட உணவு...
எங்கள் வீட்டு மணிக்கூடு
அது மிகப் பழைய மணிக்கூடு. மனைவி சொல்கிறார் அதற்கு 40 வயது இருக்கும் என்று. நான் அப்படி நினைக்கவில்லை. இன்னும் 20 வருடம் கூடுதலாகக்கூட இருக்கலாம். ஒவ்வொரு மணிக்கும் டங் டங் என்று இசையுடன் அடிக்கும். ஐந்து மணிக்கு, ஐந்து டங், ஆறு மணிக்கு ஆறு டங். இப்படி எங்கள் வீட்டு வாழ்க்கையில் அவ்வப்போது மணி பார்த்து அதன் பிரகாரம் சகல காரியங்களும் நிறைவேறிக் கொண்டிருந்தன. பிரச்சினை வரும் வரைக்கும். ...
ஒலி, ஒளிப்பதிவுகள்
திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஜனவரி 2012ல் சென்னையில் அ.முத்துலிங்கத்தின் “ஒன்றுக்கும் உதவாதவன்” உயிர்மை புத்தக வெளியீட்டின்போது ஆற்றிய உரை
முத்துலிங்கம் சிறுகதைகள் – மகாராஜாவின் ரயில் வண்டி
முத்துலிங்கம் சிறுகதைகள் – அமெரிக்கக்காரி
Muttulingam Short Stories – Inauspicious Times
இயல் விருது
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருது – 2012 கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா வழமைபோல ரொறொன்ரோவில் யூன் 16ம் தேதி ராடிஸன் ஹொட்டலில் நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இயல் விருதை தொடர்ந்து மற்றைய விருதுகளும் வழங்கப்பட்டன: புனைவு இலக்கியப் பிரிவில் ‘பயணக் கதை’ நாவலுக்காக யுவன் சந்திரசேகருக்கும்...
சன்மானம்
கடந்த வாரம் ஒருநாள் நான் வழக்கம்போல கீழ் அறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். மனைவி மேலே தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று மேலேயிருந்து சத்தம் வந்தது. அப்படிக் கத்தினால் இரண்டு காரணம்தான் இருக்கும். ஒன்று, சுடுதண்ணீர் பானையை காலிலே போட்டுவிட்டார். இரண்டு, 649 லொத்தரில் 10 மில்லியன் டொலர் விழுந்துவிட்டது. இரண்டையும் சமாளிக்கும் தைரியத்தை மனதில் உண்டாக்கிக்கொண்டே மேலே ஓடினேன்...
முதல் பரிசு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2011ம் ஆண்டுக்கான கலை இலக்கிய விருதுகளை அறிவித்திருக்கிறது. விஜயன் விக்னேஸ்வரன் இயக்கிய ’சித்ரா’ குறும்படத்திற்கு பரிசு கிடைத்திருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். இவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. இரண்டு வருடத்திற்கிடையில் இவர் இயக்கிய திரைப்படம் ஒன்று பெரும் புகழ் இவருக்கு ஈட்டிக் கொடுக்கும். இது என்னுடைய தீர்க்கதரிசனம். இதை நிஜமாக்க வேண்டியது அவர்...
Recent Comments