சிம்மாசனம் அ.முத்துலிங்கம் தினமும் 5 நிமிடம் பிந்திவரும் சோமபாலாவுக்கு வயது முப்பதுக்குள்தான் இருக்கும். ஆறடி உயரமாக இருப்பான். அடிமரக்குத்திகளை தோளிலே அனாயாசமாக தூக்கி எறிவதை கண்டிருக்கிறேன். அப்படிச் செய்யும்போது அவன் புஜத்தில் திரளும் தசைநார்கள் முறுகி உருண்டு பெருகி புஜத்தை உடைத்து வெளியே வந்துவிடுமோ என்ற அச்சத்தையூட்டும். கைகட்டி முன்னே நின்றான். ஆசனத்தில்...
வெள்ளிக்கிழமை இரவுகள்
வெள்ளிக்கிழமை இரவுகள் அ.முத்துலிங்கம் ஏதோ காட்டு மிருகம் துரத்தியதுபோல உள்ளே பாய்ந்தாள் ஆகவி. பத்து வயதுதான் இருக்கும். அவளுடன் வந்த காற்றும் உள்ளே நுழைந்தது. புத்தகப் பையை கீழே எறிந்தாள். எதையோ தேடுவதுபோல இரண்டு பக்கமும் பார்த்தாள். பத்து மைல் தூரம் ஓடிவந்ததுபோல அவளுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. தாயார் சமையல் அறையில் இருந்து மெள்ள எட்டிப்...
அடுத்த புதன் கிழமை உன்னுடைய முறை
அடுத்தபுதன்கிழமைஉன்னுடையமுறை வாரத்தில்ஏழுநாட்கள்இருப்பதில்தான்முதல்பிரச்சினைஆரம்பமானது. இதைமாற்றுவதுஅவனுடையஆற்றலுக்குஅப்பாற்பட்டது. வாரத்தில்ஆறுநாட்கள்இருந்திருக்கலாம்; எட்டுநாட்கள்கூடபரவாயில்லை. ஒற்றைப்படையாகஏழுநாட்கள்வந்ததில்தான்விவகாரம். 1700 வருடங்களுக்குமுன்புரோமாபுரிபெரும்சக்கரவர்த்திகொன்ஸ்டன்ரைன்வாரத்தில்ஏழுநாட்கள்என்றுதீர்மானித்ததைஅவன்எப்படிமாற்றமுடியும். ...
ஸ்டைல் சிவகாமசுந்தரி
ஸ்டைல் சிவகாமசுந்தரி அ முத்துலிங்கம் யாழ்ப்பாணம் டவுனுக்குப் போவதற்கு பஸ் டிக்கட் 10 சதம்தான். கொக்குவில் என்றால் 50 சதம். வவுனியாவுக்கு 4 ரூபா; கொழும்புக்கு 12 ரூபா. கொழும்புத்துறைக்கு ஒன்றுமே கொடுக்கத் தேவையில்லை. ஏனென்றால் அவள்வீடு அங்கேதான் இருந்தது. பெயர் சிவகாமசுந்தரி. வயது 15. படித்த பள்ளிக்கூடம் வேம்படி. வருடம் 1965. தினமும் அவளுடைய அப்பா அவருடைய காரில் அவளை கொண்டுபோய்...
ஆதிப் பண்பு
ஆதிப் பண்பு அ.முத்துலிங்கம் படுக்கை அறை வாசலில் இருந்து நடுக்கூடத்து ஆசனத்துக்கு தட்டுத்தடுமாறி நடந்து, இடையில் நாலுதரம் நின்று இளைப்பாறி, வந்து சேர்ந்த சார்லி அபேயசிங்க, என் நண்பனின் தகப்பன், அவருடைய 12 வயதில் ஒரு காட்டு யானையை தனியாக சுட்டு வீழ்த்தியவர். இதை எனக்குச் சொன்னது என்னுடன் பல்கலைக் கழகத்தில் படித்த ரோஹான், அவருடைய மகன். யானையை சார்லி சுட்டது நிக்கவெரட்டிய...
கடவுளை ஆச்சரியப்படுத்து
கடவுளை ஆச்சரியப்படுத்து அ.முத்துலிங்கம் ’உலகத்தின் எல்லையை கண்டுபிடிப்பதற்காக ஒரு மனிதன் நடக்கத் தொடங்கினான். பல நாட்கள் பயணம் செய்து பல மலைகளைக் கடந்து, பல ஆறுகளைத் தாண்டி உலகத்தின் எல்லைக்கு வந்து சேர்ந்தான். அங்கே ஒரு பாறை இருந்தது. அதன் உச்சிதான் எல்லை. ஒருநாள் முழுக்க ஏறி உச்சியை அடைந்தான். தான் வந்து சேர்ந்த அடையாளமாக அதிலே எழுதினான். ‘இங்கே நான் வந்தேன்.’ எழுதி முடிந்ததும் திகைத்தான்...
உன்னுடைய கால அவகாசம் இப்பொழுது தொடங்குகிறது
உன்னுடைய கால அவகாசம் இப்பொழுது தொடங்குகிறது. அ.முத்துலிங்கம் ரூபவதியில் உனக்குப் பிடித்தது அவளுடைய சிரிப்புத்தான். சிரிப்பு என்றால் அது வெளியே வராத சிரிப்பு. எந்நேரமும் சிரிப்பின் தொடக்கம் அவள் உதடுகளில் இருக்கும். பத்திரிகை படிக்கும்போதும், தேநீர் அருந்தும்போதும், வேலைகள் செய்யும்போதும், நடக்கும்போதும், அமரும் போதும், அலங்கரிக்கும்போதும் அது இருந்தது...
மஸாஜ் மருத்துவர்
மஸாஜ் மருத்துவர் மொழிபெயர்ப்பு : அ.முத்துலிங்கம் (நான் கனடாவுக்கு வந்தபோது சந்தித்த முதல் எழுத்தாளர் David Bezmozgis. அது 15 வருடங்களுக்கு முன்பு. அவருக்கு அப்போ வயது 27. அவருடைய முதல் சிறுகதையே அதீதமான பாராட்டைப் பெற்றது. அவருக்கு மிகப்பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று சொன்னேன். இன்று அவரைப் பிடிக்கமுடியாது. ஏராளமான பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுவிட்டார். அவருடைய சிறுகதை ஒன்றை அப்போது...
ஒன்றைக் கடன் வாங்கு
ஒன்றைக் கடன்வாங்கு அ.முத்துலிங்கம் ஓட்டு வளையத்தை தொட்டுக் கொண்டிருந்தால் கார் தானாகவே ஓடும் என்று நினைக்கும் வயது எனக்கு. எட்டு அல்லது ஒன்பது இருக்கலாம். ஓர் ஐஸ்கிரீமுக்காக உலகத்தில் எதையும் செய்வேன். ஒரு வட்டக் கிளாஸில் ஐஸ்கிரீமை நிரப்பி அதற்குமேல் மென்சிவப்பு பழம் ஒன்றை வைத்து தரும்போது அலங்காரமாக இருக்கும்; ருசியும் அதிகமாகும். பொய்யும் அப்படித்தான். அதைச் சொல்லும்போது...
இலையுதிர் காலம்
இலையுதிர் காலம் அ.முத்துலிங்கம் ஒவ்வொரு வருடமும் கனடாவில் 11ம் மாதம் 11ம் தேதி காலை 11 மணிக்கு 2 நிமிட நேரம் மௌனம் அனுட்டிக்கப்படும். முதலாம் உலகப் போர் 1918 நவம்பர் மாதம் காலை 11 மணிக்கு முடிவுக்கு வந்ததை நினைவுகூரும் நாள். அன்றுதான் போர் நாடுகளுக்கு இடையில் சமாதான உடன்படிக்கை கையெழுத்தானது. கனடாவில் அந்த இரண்டு நிமிடம் பஸ்கள் ஓடாது. கார்கள் ஓடாது. தெரு நிசப்தமாக இருக்கும். வீடுகளில்...
Recent Comments