எழுத்தாளர் அ. முத்துலிங்கம்

1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றி தற்சமயம் புலம் பெயர்ந்து தன் மனைவி கமலரஞ்சினியுடன் கனடாவில் வசித்து வருகிறார்.பிள்ளைகள் இருவர் : சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள் தான் அடிக்கடி இவர் கதைகளில் வரும் அப்சரா.
இலக்கியப் பணிகள்
அ. முத்துலிங்கம், பேராசிரியர் க.கைலாசபதியால் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். இலங்கை தினகரன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘அக்கா’ சிறுகதையை தலைப்பாகக் கொண்ட இவரின் முதல் தொகுப்பு திரு க.கைலாசபதியின் அணிந்துரையுடன் 1964ல் வெளியானது. நீண்டகால இடைவெளிக்கு பிறகு 1995ல் மறுபடியும் எழுதத் தொடங்கி சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தக மதிப்புரைகள், நாடக, சினிமா விமர்சனங்கள் என்று எழுதி வருகிறார். இருபதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு ஆங்கில எழுத்தாளர்களுடன் இவர் நடாத்திய நேர்காணல் கட்டுரைகள் தொகுப்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது, கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) என்னும் அறக்கட்டளை குழுமத்தில் முக்கிய உறுப்பினராக செயலாற்றுகிறார்
. கடந்த இரண்டரை வருடங்களாக, 2015ல் இருந்து ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமைப்பின் உறுப்பினராகச் செயலாற்றுகிறார். 2018 மார்ச் 5ம் தேதி ஹார்வார்ட் விதித்த இலக்கான 6 மில்லியன் டொலர்கள் உலகம் முழுவதிலுமிருந்து நன்கொடையாக திரட்டப்பட்டு விட்டதால் தமிழ் இருக்கை உறுதியானது
நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்கவைக்கின்றன. அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
இவரது நூல்கள்
புதினம்
- உண்மை கலந்த நாட்குறிப்புகள் – உயிர்மை பதிப்பகம் (2008)
- கடவுள் தொடங்கிய இடம்
சிறுகதை தொகுப்பு
- அக்கா (1964)
- திகடசக்கரம் (1995)
- வம்சவிருத்தி (1996)
- வடக்கு வீதி (1998)
- மகாராஜாவின் ரயில் வண்டி (2001)
- அ.முத்துலிங்கம் கதைகள் (சிறுகதைகள் முழுதொகுப்பு-2004 வரை எழுதியவை)
- ஒலிப்புத்தகம் – (சிறுகதைகள் தொகுப்பு – 2008)
- அமெரிக்கக்காரி (2009)
- Inauspicious Times – 2008 – (Short stories by Appadurai Muttulingam – translation by Padma Narayanan – available at Amazon.com)
- குதிரைக்காரன் – (2012)
- கொழுத்தாடு பிடிப்பேன்(தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ) – (2013) – காலச்சுவடு பதிப்பகம் – தொகுப்பு ஆசிரியர் க.மோகனரங்கன்
- பிள்ளை கடத்தல்காரன் (2015)
- ஆட்டுப்பால் புட்டு (2016)
- After Yesterday – Translated from Tamil – Short stories – 2017
- அ.முத்துலிங்கம் சிறுகதைகள் முழுத் தொகுப்பு – இரண்டு பாகம்- 2016
கட்டுரைத் தொகுப்பு
- அங்கே இப்ப என்ன நேரம்? (2005)
- பூமியின் பாதி வயது – உயிர்மை பதிப்பகம் (2007)
- கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது- (மதிப்புரைகள் தொகுப்பு – 2006)
- வியத்தலும் இலமே (நேர்காணல்கள்) – காலச்சுவடு பதிப்பகம் (2006)
- அமெரிக்க உளவாளி – கிழக்கு பதிப்பகம் (2010)
- ஒன்றுக்கும் உதவாதவன் – உயிர்மை பதிப்பகம் (2011)
- தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை – நேர்காணல்கள் (2013)
- தோற்றவர் வரலாறு (2016)
- அ.முத்துலிங்கம் கட்டுரைகள் – முழுத்தொகுப்பு – இரண்டு பாகம்- 2018ல் வெளிவருகிறது
சிறுகதைகள் பட்டியல்
சிறுகதைகள் |
ஆண்டு |
அக்கா தொகுப்பு 1964 |
1. கடைசி கைங்கரியம் |
1958 |
2. ஊர்வலம் |
1958 |
3. கோடைமழை |
1959-1961 |
4. அழைப்பு |
1959-1961 |
5. ஒரு சிறுவனின் கதை |
1959-1961 |
6. அனுலா |
1959-1961 |
7. சங்கல்ப நிராகரணம் |
1959-1961 |
8. இருப்பிடம் |
1959-1961 |
9. பக்குவம் |
1959-1961 |
10. அக்கா |
1959-1961 |
திகடசக்கரம் தொகுப்பு 1995 |
11. பார்வதி |
1994 |
12. குங்கிலிய கலய நாயனார் |
1994 |
13. பெருச்சாளி |
1994 |
14. மாற்றமா?தடுமாற்றமா? |
1994 |
15. வையன்னா கானா |
1994 |
16. குதம்பேயின் தந்தம் |
1994 |
17. செல்லரம்மான் |
1994 |
18. திகடசக்கரம் |
1994 |
வம்சவிருத்தி தொகுப்பு 1996 |
19. துரி |
1995 |
20. ஒருசாதம் |
1995 |
21. கிரகணம் |
1995 |
22. விழுக்காடு |
1995 |
23. பீனிக்ஸ் பறவை |
1995 |
24. முழுவிலக்கு |
1995 |
25. முடிச்சு |
1995 |
26. ஞானம் |
1995 |
27. சிலம்பு செல்லப்பா |
1995 |
28. வம்சவிருத்தி |
1995 |
29. பருத்தி பூ |
1995 |
30. வடக்கு வீதி |
1996-1997 |
வடக்கு வீதி தொகுப்பு 1998 |
31. எலுமிச்சை |
1996-1997 |
32. குந்தியின் தந்திரம் |
1996-1997 |
33. வசியம் |
1996-1997 |
34. பூமாதேவி |
1996-1997 |
35. யதேச்சை |
1996-1997 |
36. கம்ப்யூட்டர் |
1996-1997 |
37. ரி |
1996-1997 |
38. உடும்பு |
1996-1997 |
39. மனுதர்மம் |
1996-1997 |
40. விசா |
1996-1997 |
41. ஒட்டகம் |
1996-1997 |
மகாராஜாவின் ரயில்வண்டி தொகுப்பு 2001 |
42. மகாராஜாவின் ரயில்வண்டி |
1999-2000 |
43. நாளை |
1999-2000 |
44. தொடக்கம் |
1999-2000 |
45. ஆயுள் |
1999-2000 |
46. விருந்தாளி |
1999-2000 |
47. மாற்று |
1999-2000 |
48. அம்மாவின் பாவாடை |
1999-2000 |
49. செங்கல் |
1999-2000 |
50. கடன் |
1999-2000 |
51. பூர்வீகம் |
1999-2000 |
52. கறுப்பு அணில் |
1999-2000 |
53. பட்டம் |
1999-2000 |
54. ஐவேசு |
1999-2000 |
55. எதிரி |
1999-2000 |
56. ஐந்தாவது கதிரை |
1999-2000 |
57. தில்லை அம்பல பிள்ளையார் கோயில் |
1999-2000 |
58. கல்லறை |
1999-2000 |
59. கொம்புளானா |
1999-2000 |
60. ராகு காலம் |
1999-2000 |
61. ஸ்ரோபரி ஜாம் போத்தலும் அபீஸீனியன் பூனையும் |
1999-2000 |
பிற |
62. 23 சதம் |
2001 |
63. மொசுமொசுவென்று சடை வைத்த வெள்ளை முடி ஆடுகள் |
2001 |
64. அடைப்புகள் |
2001 |
65. போரில் தோற்றுப்போன குதிரை வீரன் |
2001 |
66. தாத்தா விட்டுபோன தட்டச்சு மெசின் |
2002 |
67. ஆப்பிரிக்காவில் அரை நாள் |
2002 |
68. கொழுத்தாடு பிடிப்பேன் |
2002 |
69. அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை |
2003 |
70. முதல் விருந்து முதல் பூகம்பம் முதல் மனைவி |
2003 |
71. காபூல் திராட்சை |
2003 |
72. நாற்பது வருட தாபம் |
2003 |
73. பூமத்திய ரேகை |
2003 |
74. தளுக்கு |
2003 |
75. எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை |
2003 |
குதிரைக்காரன் தொகுப்பு |
2012 |
76. குதிரைக்காரன் |
2012 |
77.குற்றம் கழிக்க வேண்டும் |
2012 |
78.மெய்காப்பளன் |
2012 |
79.பாரம் |
2012 |
80.ஐந்து கால் மனிதன் |
2012 |
81.ஜகதலப்ரதாபன் |
2012 |
82.புளிக்கவைத்த அப்பம் |
2012 |
83.புது பெண்சாதி |
2012 |
84.22 வயது |
2012 |
85.எங்கள் வீட்டு நீதிவான் |
2012 |
86.தீர்வு |
2012 |
87.எல்லாம் வெல்லும் |
2012 |
88.மூளையால் யோசி |
2012 |
89.ஆச்சரியம் |
2012 |
90.கனகசுந்தரி |
2012 |
அமெரிக்ககாரி தொகுப்பு |
2009 |
பரிசுகளும், விருதுகளும்
- தினகரன் சிறுகதைப் போட்டி பரிசு – 1961
- கல்கி சிறுகதைப் போட்டி பரிசு
- திகடசக்கரம் – லில்லி தேவசிகாமணிப் பரிசு – 1995
- வம்சவிருத்தி – சிறுகதைத் தொகுப்பு – தமிழ்நாடு அரசாங்கம் முதல் பரிசு – 1996
- வம்சவிருத்தி – சிறுகதைத் தொகுப்பு – இந்திய ஸ்டேட் வங்கி முதல் பரிசு – 1996
- ஜோதி விநாயகம் பரிசு – 1997
- வடக்கு வீதி – சிறுகதைத் தொகுப்பு – இலங்கை அரசு சாகித்தியப் பரிசு – 1999
- கனடா தமிழர் தகவல் – நாற்பது ஆண்டு தமிழ் இலக்கியச் சாதனை விருது – பிப்ரவரி 2006
- திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது – 2012
- குதிரைக்காரன் – சிறுகதைத் தொகுப்பு – 2012ன் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விகடன் விருது[1]
- எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராய விருது 2013
- மார்க்கம் நகரசபை இலக்கிய விருது – 2014
Latest stories
எக்ஸ் தந்த நேர்காணல் அ.முத்துலிங்கம் சினிமா என்று வரும்போது நடிகர் நடிகைகளையே எல்லோரும் சந்திக்க விரும்புவார்கள். அடுத்து இயக்குநர். அதற்கும் அடுத்தபடியாக இசையமைப்பாளர். பின்னர் பாடகர் இப்படிப் போகும். நான் பார்க்க விரும்புவது தயாரிப்பாளர்களைத்தான். அவர்கள்மேல் நெடுங்காலமாக எனக்கு இருக்கும் ஈர்ப்பை வர்ணிக்கமுடியாது. அதைப்பற்றி விளக்கவும் இயலாது. அவர்கள் எதற்காக படம் தயாரிக்கிறார்கள்? பணமா அல்லது...
ஐயாயிரம் வருடத்துக் கதை அ.முத்துலிங்கம் சிவகாமியின் சபதம் நாவலை கல்கி பன்னிரெண்டு வருடங்களாக தொடர்ந்து பத்திரிகையில் எழுதினார். பின்னர் அது நாவலாகவும் வந்தது. அதன் கதைச் சுருக்கத்தை அரைப் பக்கத்தில் எழுதிவிடமுடியும். தமிழ்மகன் எழுதிய ‘வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’ நாவல் 182 பக்கங்கள்தான். அதன் கதைச் சுருக்கத்தை எழுதவே முடியாது. ஏனென்றால் நாவல்தான் சுருக்கம். ஆயிரம் பக்கங்கள் வரக்கூடிய...
எதிர்பாராதது அ.முத்துலிங்கம் ஒரு பிரபலத்தை நேர்காணல் செய்வதற்கு எனக்கு ஒரு வருடகாலம்கூட அலையவேண்டி இருந்திருக்கிறது. என் வாழ்க்கையில் பலரை நேர்காணல் செய்திருக்கிறேன். பிரபல எழுத்தாளர்கள், நடிகர்கள், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், இயக்குநர்கள், பாடகர்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் இலகுவில் நேரத்தை ஒதுக்கித் தரமாட்டார்கள். தட்டிக் கழிக்கவே செய்வார்கள். ஆனால் சமீபத்தில் எனக்கு ஒரு சின்ன...
அந்திமழை நேர்காணல் கொக்குவில் முதல் கனடா வரையிலான பயணம்: பெற்றது என்ன ? இழந்தது என்ன? பயணத்தில் பெறும் அனுபவத்திற்கு ஈடு அதுதான். கொக்குவில என்ற சின்னக் கிராமத்தில் பிறந்த நான் பயணங்களின்போது நிறையக் கற்றுக்கொண்டேன். நூறு புத்தகங்கள் படிப்பதும் சரி ஒரு புதியவரை சந்திப்பதும் ஒன்றுதான். ஒவ்வொரு மனிதரை சந்திக்கும்போதும் அவரிடமிருந்து ஏதாவது ஒரு நல்ல குணாதிசயத்தை நான் பெற்றுக்கொள்ள முயல்வேன்...
சந்திப்போம் அ.முத்துலிங்கம் நான் செழியனை முதன்முதலில் சந்தித்தது 2001ம் ஆண்டு ரொறொன்ரோவில் நடந்த ஒரு விழாவில். என்னை ’அண்ணை’ என்று அழைத்தார். கூச்சமாக இருந்தது. நீண்ட காலமாக என்னை அப்படி ஒருவரும் அழைத்தது கிடையாது. அவர் குரல் கனிவாகவும், குனிந்து கிட்டக் கேட்கவேண்டும் என்பதுபோல மிருதுவாகவும் இருந்தது. உடனேயே ஓர் அந்நியோன்யம் எங்களுக்கிடையில் உண்டாகிவிட்டது. அந்த முதல் சந்திப்பே என்னை...
முதலில் கட்டுங்கள், அவர்கள் வருவார்கள் பாலா சுவாமிநாதனுடன் ஒரு நேர்காணல் அ.முத்துலிங்கம் (மதுரையை சேர்ந்த திரு பாலா சுவாமிநாதன் அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் கணினித் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். நியூயோர்க் நெடுந்தீவில் பிரபல நிதி நிறுவனம் ஒன்றில் ஆய்வாளராக பணியாற்றுகிறார். கடந்த மாதம் பல்லாயிரம் டொலர்கள் வைப்புக் கொடை அமைப்பதன் மூலம் நியூ யோர்க் ஸ்டோனி புரூக்...
ரயில் புறப்பட்டுவிட்டது புனைவு என்ற வார்த்தையை, அதன் சாத்தியங்களை முழுமையாக எப்போது உணர்ந்தீர்கள்? அந்த கணம் நினைவிருக்கிறதா? நிச்சயமாக. எங்கே எந்த நேரத்தில் என்ன படித்தேன் என்பதும் நினைவில் இருக்கிறது. கல்கி, மு.வரதராசனார், காண்டேகர் எல்லோரையும் படித்துவிட்டேன். புதுமைப்பித்தன் இரவலாகக் கிடைத்து முதன்முதலாக ‘பொய்க்குதிரை’ சிறுகதையை படிக்கிறேன். அப்படியே சில நிமிடம் திகைத்து...
ஊபர் அ.முத்துலிங்கம் சிலருக்கு எங்கே போனாலும் ஒரு பிரச்சினை வரும். சிலர் பிரச்சினையை தங்களுடன் எடுத்துக்கொண்டு செல்வார்கள். நான் இரண்டாவது வகை. எங்கே போனாலும் என் கைப்பைபோல பிரச்சினையும் வந்துவிடுகிறது. இப்பொழுது பொஸ்டனுக்குப் போனபோதும் இப்படி நடந்தது. ஒருநாள் காலை நண்பரிடமிருந்து அழைப்பு ஒன்று வந்தது. ’ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்திருக்கிறோம். வரமுடியுமா?’ வழக்கம்போல சரி என்று சொல்லிவிட்டு...
பிரதாப முதலியார்.ச அ.முத்துலிங்கம் அன்று அவனைச் சந்தித்திருக்காவிட்டால் இது நடந்திருக்காது. காலையில் கொக்குவில் ரயில் ஸ்டேசனுக்கு வந்திருந்தான். வயது 12 இருக்கும். ஏதோ பெரிய ஆள்போல இவன் முன்னுக்கு நடந்துவர, பின்னால் தள்ளுவண்டியில் ஒரு மூட்டையை தள்ளிக்கொண்டு ஒருவன் வந்தான். இவன்தான் சொந்தக்காரன்போல இருந்தது. ஸ்டேசன் மாஸ்டர் கொடுத்த படிவத்தைப் பெற்று அதை ஆங்கிலத்தில்...
அடுத்த ஞாயிறு அ.முத்துலிங்கம் வைத்திலிங்கம் சமையல்கட்டுக்குள் நுழைந்தார். தையல்நாயகி திடுக்கிட்டுப்போய் எழுந்து நின்றார். அவர் கணவன் சமையல்கட்டுக்குள் வருவதே கிடையாது. மணமுடித்த கடந்த 15 வருடங்களில் இது இரண்டாவது முறையாக இருக்கலாம். தையல்நாயகிக்கு முன்னால் பெரிய கடகத்தில் மாங்காய்கள் பெரிசும் சிறிதுமாக பல அளவுகளில் கிடந்தன. அவற்றை ஊறுகாய்க்காக வெட்டிக்கொண்டிருந்தார். முதல் நாள்...
Recent Comments